2008-09-27 20:13:07

இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு எதிராக புதிய வன்முறைகள். 270609.


ஒரிசாவின் காந்தமால் மாவட்டத்தில் 100 வீடுகளும் பல கோயில்களும் புதிதாகக் கிளம்பியுள்ள வன்முறைகளால் தாக்கப்பட்டு நொறுக்கப்பட்டுள்ளன. ராஞ்சி நகரில் கர்தினால் டெலஸ்போரே டோப்போவின் உருவப் பொம்மையை அவருடைய இனத்தைச் சேர்ந்த ஒராவோன் பழங்குடி மக்கள் எரித்தனர். அவர்கள் அங்குள்ள புரோட்டஸ்டாண்டு மதத்தினர் விவிலியத்தில் ஒரு பகுதியில் தவறாக இறைவாக்கை அச்சடித்துள்ளதாகக் கூறி அதற்கு கர்தினால் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளனர் . ஜாம்ஷெட்பூரில் கிறிஸ்தவத் தேவாலயத்தில் திருட்டு நடந்ததாகக் கூறப்பட்டது . திருடியவர்கள் பணத்தை உண்டியலிலிருந்து எடுக்கவில்லை . அவர்கள் தேவ நற்கருணைப் பாத்திரத்தைத் திருடி அதிலிருந்த காணிக்கை செய்யப்பட்ட நற்கருணையைத் தீட்டுப்படுத்தியுள்ளனர் எனக்கூறி ஜாம்ஷெட்பூர் ஆயர் தேவாலயத்தைச் சுத்திகரித்து அர்சித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.