ரெட்ரோவே எனும் இல்லற வாழ்வியல் மன்றத்தினர் திருத்தந்தையைச் சந்தித்தனர்.2609.
வத்திக்கான் திருப்பீடத்தின் இல்லற வாழ்வியல் மன்றம் நடத்திய கருத்தரங்கு உறுப்பினர்களை
வெள்ளி நண்பகலில் வரவேற்றுப் பேசினார் திருத்தந்தை . உறுப்பினர்கள் சார்பாக திருத்தந்தைக்குத்
தொடக்கத்தில் வாழ்த்துக்கூறினார் இத்தாலிய ஆயர்கள் குழுவின் வாழ்வியல் மன்றத்தின் தலைவர்
மேதகு ஆயர் ஜோசப்பே அன்போசி. ரெட்ரோவே எனும் இம் மன்றம் இல்லற வாழ்வில் உருவாகும் பிரச்சனைகளுக்கு
ஆலோசனை வழங்குவதாகும் . இல்லற வாழ்வை அன்பு மயமாக்க தூய ஆவியானவர் அருள் மழை பொழியட்டும்
என்றார் திருத்தந்தை. மணமுறிவும் மணவாழ்க்கையில் பிரிந்திருப்பதும் அதிகரித்து வரும்
இக்காலக்கட்டத்தில் தம்பதியரை ஒற்றுமைப்படுத்தி அன்புற்று வாழ வழிகாட்ட கனடா நாட்டின்
கீ ஜொவான்னி பேலண்ட் என்பவர் 1977 ல் தொடங்கிய அமைப்புத்தான் ரெட்ரோவே எனும் திருமண ஆலோசனை
குழுமம் எனக் கூறிய திருத்தந்தை குடும்ப வாழ்வில் இருள் சூழ்ந்து வரும் வேளையில் நம்பிக்கை
ஒளி வீசி இல்லறத்தை மலரச் செய்யட்டும் எனக் கூறி ஆசி வழங்கினார்.