உருகுவே நாட்டு ஆயர்கள் திருத்தந்தையைச் சந்தித்தனர்.26செப்.-08.
உருகுவே நாட்டு ஆயர்கள் 26 செப்.வெள்ளி காலையில் வழக்கமான அத் லீமினாவுக்காக திருத்தந்தையை
காஸ்டல் கண்டால்போ மாளிகையில் சந்தித்தனர் . உருகுவேயின் ஆயர்கள் குழுத் தலைவர் மேதகு
கார்லோஸ் மரிய கொலாட்சி திருத்தந்தைக்கு வாழ்த்துக் கூறினார் . ஆயர்களை வரவேற்றுப் பாராட்டிய
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் ஆயர்கள் உரோமைக்கு வருகை தந்து திருத்தூதர்களின் புனித
கல்லறைகளைத் தரிசிப்பதும் திருத்தந்தையோடு்ம் அவர் வழியாக உலகத்தின் அனைத்து ஆயர்களோடும்
தொடர்புகொள்வதும் நாம் அனைவரும் ஓருள்ளமும் ஓருயிர்த்துடிப்பும் கொண்டிருக்க உதவும் என்றார்
. உருகுவே நாட்டு இறை மக்களுக்கும் , உலகத்து மக்கள் அனைவருக்கும் சகோதர அன்பில் வாழ
வழி காட்ட இது ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் எனவும் திருத்தந்தை கூறினார் . எம்மாவுஸ்
சீடர்கள் உயிர்த்த இயேசுவைச் சந்தித்து புத்துணர்ச்சி பெற்று புது வாழ்வைத் தொடங்கிய
பாணியில் உருகுவே ஆயர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குக் கொண்டிருக்கும் மறைப் பணித்திட்டங்கள்
நல்ல பயன்களைத் தர திருத்தந்தை அவர்களுக்கு நல்லாசி வழங்கினார் .