இங்கிலாந்து நாட்டின் காண்டர்பரிப் பேராயர் டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ
சபைப் பேராயர் . புரோட்டஸ்டண்ட் என்ற பிரிவினைக் கிறிஸ்துவ மதத்தைத் தொடங்கி , பாதுகாத்து
வரும் ஆங்கில மகாராணியோ மன்னரோ இவரைப் பேராயராக நியமனம் செய்வர் . புரோட்டஸ்டாண்டு சமயம்
கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராகக் கிளம்பிய பிரிவினைச் சபையாகும் . ஆங்கிலிக்கன் சபையின்
பேராயர் ஒருவர் லூர்து நகர் செல்வதும் அங்கே திருப்பலி நிகழ்த்துவதும் வரலாற்றிலேயே இதுவே
முதல் முறையாகும் . புரோட்டஸ்டண்ட் சமயம் மறுமலர்ச்சி இயக்கமாகக் கத்தோலிக்கத் திருச்சபையில்
இருந்துவரும் அன்னை மரியாள் வணக்கம் , புனிதர்களின் வணக்கம் , மற்றும் தரிசனங்கள் ஆகியவற்றை
எதிர்த்து வருகின்ற சமயமாகும் . எனவே டாக்டர் ரோவன் வில்லியம்ஸ்ஸின் லூர்து நகர்ப் பயணம்
கத்தோலிக்கத் திருச்சபையில் வழக்கத்தில் இருக்கும் வழிபாட்டுப் பழக்கங்களை ஏற்றுக் கொள்வதாகும்
. அங்கு நிகழ்த்திய மறையுரையில் புனிதமான லூர்து நகருக்குச் செல்பவர்கள் புதுப்பிக்கப்பட்டு
தூய ஆவியானவரின் அருங்கொடைகளால் நிரப்பப்பட்டு செல்லும் இடமெல்லாம் இயேசுவைத் தாங்கிச்சென்று
பெற்ற பெரு மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் ரோவன் வில்லியம்ஸ்
.