2008-09-23 14:47:02

ஆப்ரிக்காவுக்கான வளர்ச்சித் திட்டங்களில் அக்கண்டத்தின் குடும்பங்கள் காக்கப்பட வேண்டும்- பேராயர் மிலியோரே.


செப்.23,2008. ஆப்ரிக்காவை முன்னேற்றுவதற்கென எடுக்கப்படும் அனைத்துப் பொருளாதார மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் அக்கண்டத்தின் குடும்பங்கள் மற்றும் அவற்றின் கலாச்சாரத் தனித்துவத்தைக் காப்பது முக்கிய இடம் பெறுமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் அழைப்புவிடுத்தார்.

ஆப்ரிக்காவின் வளர்ச்சிக்கான தேவைகள் என்ற தலைப்பில் ஐ,நா.வில் உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் பேசிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தினோ மிலியோரே, ஆப்ரிக்க கண்டம் அறுபது விழுக்காட்டு மக்களை 25 வயதுக்குட்பட்டவர்களாய்க் கொண்டு மிக இளமையான கண்டமாக விளங்குகிறது என்றார்.

ஆப்ரிக்காவில் அண்மையில் காணப்படும் பொருளாதார வளர்ச்சி, அக்கண்டத்தின் ஏழ்மையை அகற்றவும், மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தவும் கல்வித்தரத்தை முன்னேற்றவும் திருச்சபை ஆற்றி வரும் சேவைகளையும் பேராயர் மிலியோரே குறிப்பிட்டார்.

ஆப்ரிக்கா, உலகில் மிகக் குறைவான ஆயுட்காலத்தைக் கொண்ட கண்டமாகும்.








All the contents on this site are copyrighted ©.