2008-09-22 20:25:42

பாகிஸ்தானின் ஆயர் அங்கு நடந்த குண்டு வெடிப்புக்குக் கண்டனம் . 220908.


இம்மாதம் 20 ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள மாரியட் தங்கும் விடுதியில் வெடிப்பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி அங்கு நின்ற காவலர்கள் தடுத்தபோது வெடிக்கச் செய்து 53 உயிர்கள் இறப்பதற்கும் 270 பேர் காயமடைவதற்கும் காரணமாக இருந்தது . தொலைபேசி வழி சிஎன்எஸ் செய்தி ஊடகத்துக்குச் செய்தி வழங்கிய கத்தோலிக்க ஆயர் அந்தோனி லோபோ இச்செயலை திருச்சபை கண்டிப்பதாகத் தெரிவித்தார் . பாகிஸ்தானில் உள்ள ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை புரிந்து தாக்கப்பட்டவர்களுக்காகச் செபித்ததாக ஆயர் கூறினார் . தீவிரவாதிகள் எதையும் எப்பொழுதும் செய்யலாம் எனச் செயல்படுவதாகக் கூறினார் ஆயர் லோபோ . ஆயர் லோபோ பாகிஸ்தான் ஆயர் குழுவின் தலைமைச் செயலராக உள்ளார் .








All the contents on this site are copyrighted ©.