கிறிஸ்துவின் சிலுவைக்கு சான்று பகர்வது விடுதலை அளிக்கும் என்கிறார் கர்தினால் டாப்போ
. 210908 .
இந்தியாவில் பல பகுதிகளில் நடந்து வரும் தாக்குதல் பற்றி தமது கருத்துக்களை வெளியிட்டார்
கர்தினால் டெலஸ்போரே டாப்போ . மகாத்மா காந்தியின் விடுதலைப் போராட்டப் பணி முழுமை பெறவேண்டும்
என்ற கர்தினால் டாப்போ , வெறுப்பும் தீவிரவாதமும் அகிம்சையாலும் கிறிஸ்துவின் மன்னிப்பாலும்
மேற்கொள்ளப்பட்டு , உண்மை வெற்றி காண வேண்டும் என விழைகின்றார் . காந்தி எப்பொழுதும்
சமத்துவத்தையே போதித்தார் .நாமெல்லோரும் கடவுளின் பிள்ளைகள் எனக் கூற அவர் சலிப்படைந்ததே
இல்லை . ஆனால் அவரைப் புரிந்து கொள்ளாதவர்கள் அவரைக் கொன்றார்கள் எனக் கூறினார் கர்தினால்
. காந்திஜியின் பணி இன்னும் முடியவில்லை எனக்கூறிய கர்தினால் டாப்போ , இந்தியா தீய சக்திகளிலிருந்து
விடுதலை பெற வேண்டும் என்றும், இந்த இருளின் சக்திகள் ஆலயங்களை எரிப்பதும்,சகோதரிகளைக்
கற்பழிப்பதும் அப்பாவி கிறி்ஸ்தவர்களைக் கொல்லுவதும் நிறுத்தப்படவேண்டும் என்றும் இத்தீய
சக்திகளிலிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டும் என்றும் கர்தினால் டாப்போ மேலும் கூறினார்
. கர்தினால் டாப்போ ஆசியச் செய்தி நிறுவனத்துக்கு இவ்வாறு செய்தி வழங்கினார் .