செப்.20, 2008. மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரிலுள்ள 150 வருட பழமையுடைய புனிதர்கள்
பேதுரு பவுல் பேராலயப் பீடம் கடந்த வியாழன் இரவு தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது..
இவ்வன்முறையைக் கண்டித்து மத்திய பிரதேச மாநிலக் கிறிஸ்தவர்கள் அமைதிப் போராட்டங்களை
நடத்தினர். நேற்று ஜபல்பூர் கிறிஸ்தவப் பள்ளிகளும் மூடப்பட்டு இருந்தன.
இன்னும்.
புனிதர்கள் பேதுரு பவுல் உருவச் சிலைகள், விரிப்புப் போன்றவையும் சேதமாக்கப்பட்டுள்ளன
ஜபல்பூர்
ஆயர் ஜெரால்டு அல்மேய்தா முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகானைச் சந்தித்து இத்தாக்குதலைக்
கண்டித்ததோடு மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும் கோரியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் சுமார் ஆறு கோடி மக்களுள் 91 விழுக்காட்டினர் இந்துக்கள்.
கிறிஸ்தவர்கள் ஒரு விழுக்காட்டுக்குக் குறைவானவர்களே.