2008-09-19 19:20:24

பனாமா நாட்டு ஆயர்களுக்கு ஆசியுரை வழங்கினார் திருத்தந்தை . 190909 .


பனாமா நாட்டு ஆயர்கள் குழு 19 செப். 08 காலை திருத்தந்தையை அவருடைய காஸ்டல் காண்டால்போ மாளிகையில் அத்லீமினா என்ற வழக்கப்படி சந்தித்தனர் . – நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் நன்றி கூறுகிறோம் – என்ற திருத்தூதர் பவுல் அடிகளாரின் தெசலோனிக்கர் திருமடலின் தொடக்க வரிகளை மேற்கோள் காட்டி அவ்வரிகள் திருத்தந்தையின் உள்ளத்து உணர்வுகளைத் தெரிவிப்பதாகக் கூறி பனாமா ஆயர்களை திருத்தந்தை வரவேற்றார் . தொடக்கத்தில் ஆயர்கள் குழுவின் தலைவர் மேதகு ஜோஸ் லூயி மேஸ்திரோ ஜுவான் வழங்கிய வாழ்த்துக்கு நன்றி கூறினார் திருத்தந்தை . தூய பேதுருவின் இருக்கையில் அமர்ந்துள்ள திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் பனாமா நாட்டோடு ஒன்றித்து அங்குள்ள ஆயர்கள் குருக்கள் துறவறத்தார் மற்றும் இறை மக்களுக்கும் அவரது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் . இறைவனின் வார்த்தையை பனாமா நாட்டினர் உள்ளத்தில் நிறுத்தி இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ ஆயர்கள் ஆற்றும் பணி மகிழ்ச்சி அளிப்பதாகவும் திருத்தந்தை தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.