குடும்ப வாழ்வின் மேன்மைக்காக கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இணைந்திருப்போம் என்கிறார்
கர்தினால் ஜான் லூயி தோரான் . 19 செப்.-08 .
நோன்பிருந்த இரமதான் மாதத்தின் முடிவில் இஸ்லாமிய சமூகத்தனருக்கு வத்திக்கான் திருப்பீடத்தின்
பல் சமய நல்லிணக்க மன்றத்தின் தலைவர் கர்தினால் தோரான் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்
. கிறிஸ்தவர்கள் இஸ்லாமியரின் இறைச்சிந்தனைகளிலும் குடும்ப விழாக்களிலும் பங்கேற்றது
மகிழ்ச்சி தருவதாகக் கூறினார் கர்தினால் தோரான் . நண்பர்கள் ஒன்றுகூடி மகிழும்போது உறவை
வளர்க்க அவர்களுக்குப் பிடித்தமான கருத்துக்களைப் பரிமாறி்கொள்வது நலம் பயப்பதாகும் .
கிறிஸ்தவர்களும் இஸலாமியரும் குடும்பத்தின் மேன்மையைப் போற்றுகின்றவர்கள் . வாழ்வும்
அன்பும் , பிறரை மதித்தலும் விருந்தோம்புதலும் அன்றாடம் பரிமாறப்படுவது குடும்பம் என்ற
அடித்தளத்தில் என்றார் . குடும்ப உறவைப் போற்றும் நாம் குடும்பத்தின் முக்கியத்துவத்தைக்
காக்கக் கரங்களை இணைப்போம் என்று கூறி இரமதான் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் கர்தினால்
தோரான் .