பாப்பிறை 12 ஆம் பத்திநாதரின் 50 ஆண்டு நினைவுக் கருத்தரங்கு . 180908 .
முந்நாள் பாப்பிறை 12 ஆம் பத்திநாதர் அக்டோபர் 9 , 1958 ல் காலமானார் . அவரைப்பபற்றிய
கருத்தரங்கு உரோமையில் நடந்தது . திரு காரி கிரப் என்பவர் தலைமையில் கருத்தரங்கின் உறுப்பினர்கள்
திருத்தந்தையை அவரது காஸ்டல் காண்டால்போ மாளிகையில் இந்த வியாழன் காலை சந்தித்தனர் .
பேவ் த வே அதாவது பாதையை உருவாக்கு என்ற அந்த அமைப்பைத் திருத்தந்தை பாராட்டினார் . பாப்பிறை
12 ஆம் பத்திநாதரின் கருத்தடங்கிய போதனைகளையும் அவருடைய போற்றதற்குரிய செயல்பாடுகளையும்
உய்த்துணர பேவ் த வே கருத்தரங்கு வாய்ப்பளித்துள்ளதாகத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
பாராட்டினார் . முந்நாள் பாப்பிறையின் மதி நுட்பத்தையும் அருமையான பணிகளையும் முக்கியமாக
யூதர்களுக்கு அவர் செய்த நன்மைகளையும் பாராட்டினார் திருத்தந்தை .