2008-09-13 14:15:43

திருச்சபை தனது பணிகளில் வாழ்வைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறது


செப்.13, 2008. திருச்சபை தனது மேய்ப்புப் பணி நடவடிக்கைகளில் வாழ்வையும் சமய சுதந்திரத்தையும் ஆதரிப்பது, அமைதி மற்றும் மனித உரிமைகளுக்காகத் தாகம் கொள்வது போன்ற பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது என்று திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் ரெனாத்தோ மர்த்தீனோ ௬றினார்.



போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் நடைபெற்று வரும் சமூக நடவடிக்கை பற்றிய மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் மர்த்தீனோ, மனித மாண்பு மற்றும் அடிப்படை ஒழுக்க நெறி உண்மைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது அவைகளைப் பாதுகாப்பதற்குத் திருச்சபை தெளிவான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றார்.



திருச்சபையின் எதிர்கால மேய்ப்புப் பணி நடவடிக்கைகளில், ஜனநாயகத்தின் சரிவுகள், வளர்ச்சிகள் போன்றவையும் இடம் பெறும் என்றும் கர்தினால் மர்த்தீனோ ௬றினார்







All the contents on this site are copyrighted ©.