சாம்பியாவின் புதிய அரசு வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அழைப்பு
செப்.13,2008. சாம்பியாவின் அரசுத் தலைவர் லெவி முவானாவாசா தனது 59 வது வயதில் கடந்த
மாதத்தில் பிரான்சில் உயிரிழந்ததையொட்டி அந்நாடு புதிய அரசுத் தலைவரை நவம்பரில் தேர்ந்தெடுக்கவுள்ள
வேளை, புதிய அரசு வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு கத்தோலிக்க அமைப்பு ஒன்று
அழைப்பு விடுத்துள்ளது.
புதிய அரசு பற்றிப் பேசிய சாம்பிய இயேசு சபை இறையியல்
சிந்தனை மையம், அரசுத் தலைவர் முவானாவாசாவின் நிர்வாகத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும்
பசியும் வறுமையும் பரவலாக இருந்தது என்று ௬றியது.
சாம்பியாவில் சுமார் 62 விழுக்காட்டினர்
வீதம் வறுமையில் வாழ்கின்றனர் என்று அம்மையத்தின் உதவி ஒருங்கிணைப்பாளர் ௬றினார்.