பிரான்ஸ் நாட்டின் திருப்பயணம் போது உலகக் கலாச்சாரத்துக்கு செய்தி வழங்கவுள்ளார் திருத்தந்தை
16 ஆம் பெனடிக்ட் .11செப்.
திருத்தந்தையின் பிரான்ஸ் நாட்டுத் திருப்பயணம் பற்றி கருத்து வெளியிட்ட வத்திக்கான்
திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள் தந்தை பெடரிகோ லொம்பார்டி ,சேசு சபை , திருத்தந்தை
திருப்பயணத்தின் போது உரை நிகழ்த்த ஆர்வத்தோடு தயாரித்து வருவதாகக் கூறினார் . 12 செப்.
வெள்ளி பிற்பகலில் அகில உலக அறிஞர்களைச் சந்திக்க உள்ளார் . தலை சிறந்த சிந்தனையாளர்கள்
, கலை மற்றும் அறிவியல் வல்லுனர்கள் , யுனெஸ்கோ, ஐரோப்பிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்
ஆகியோரைச் சந்தித்து உரை வழங்கவுள்ளார். இந்தக் குழு அமர்வு பாரிசில் உள்ள பெர்நாடைன்
கல்லூரியில் நிகழ உள்ளது .