திருத்தூதர் பவுல் ஓர் எடுத்துக்காட்டான மறைபோதகர்.11செப்.
இம்மாதம் 4 ஆம் தேதி கெளகாத்தியின் மறைப்பணிக்குழுவின் 150 குருக்கள் , துறவியர் மற்றும்
பொது நிலைக் கத்தோலிக்கர்கள் இதில் கலந்து கொண்டனர். 35 பங்குத் தளங்களிலிருந்து உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர் . திருத்தூதர் பவுல் அடிகளார் ஓர் எடுத்துக்காட்டான மறைப்பணியாளர் என்ற
தலைப்பில் கருத்துக்கள் பறிமாறப்பட்டன . திருத்தூதர் பவுல் அஞ்ஞாது தடைகளுக்கு அப்பால்
கருத்தோடு மறைப்பணி செய்ததாகப் பேராயர் தாமஸ் மீனாம்பரம்பில் அவருடைய தொடக்க உரையில்
கூறினார் . கருத்தரங்கில் பேசிய திருநூல் அறிஞர் முனைவர் அருள் தந்தை ஜோஸ் வரிக்கச்செரில்
திருத்தூதர் பவுல் அடிகளார் கடவுள் சார்பாக கடவுள் கூற விரும்பியதையே அறிவித்ததாகக் கூறினார்