2008-09-11 20:48:43

ஒரிசாவில் கிறிஸ்தவர் உயிரோடு அடக்கம். 11செப்.


சென்னையில் பணிசெய்துவிட்டு விடுமுறைக்கு ஒரிசா சென்ற இராஜேஸ் திகால் என்ற கிறிஸ்தவர் ஆகஸ்ட் 24 ல் ஜி . உதயகிரியிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பாடாகுடா என்ற அவரது சொந்த ஊருக்கு, பேருந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக நடந்தே சென்றிருக்கிறார். அவருடன் இந்து நண்பர் துங்குரு மாலிக் என்பவரும் சென்றிருக்கிறார். 12 கி.மீட்டர் சென்ற அவர்கள் பபூரியா என்ற ஊரில் வழி மறிக்கப்பட்டு இராஜேஸ் பையில் பைபிள் இருந்ததால் அவர் கிறிஸ்தவர் என அறிந்த தீவிரவாதக் கும்பல் அவரை நையப்புடைத்துக் காயப்படுத்தி உயிரோடு புதைத்தாக அவர் நண்பர் துங்குரு மாலிக் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.