செப்.9, 2008. ஆசியாவில் திருவழிபாட்டை மேம்படுத்தும் நோக்கத்தில் செப்டம்பர் 16 முதல்
21 வரை இலங்கையில் திருவழிபாட்டு மாநாடு ஒன்றை திருவழிபாடு மற்றும் திருவருட்சாதனத் திருப்பேராயம்
நடத்தவுள்ளது.
இம்மாநாடு குறித்துப் பேசிய இத்திருப்பேராயச் செயலர் பேராயர் மால்கம்
ரஞ்சித், திருவழிபாடு சரியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதில் திருத்தந்தை 16ஆம்
பெனடிக்ட் மிகவும் கவனமாய் இருக்கிறார் என்றார்.
திருச்சபையின் புதுப்பித்தலுக்கு
திருவழிபாடு மிகவும் முக்கியம் என்றுரைத்த அவர், நீ விசுவசிப்பதைக் கொண்டாடுகிறாய், நீ
விசுவசிப்பதன் அடிப்படையிலே வாழ்வு அமையும் என்றும் ௬றினார்.
கொழும்புவில் நடைபெறும்
இம்மாநாட்டில் 19 ஆசிய நாடுகளிலிருந்து 55 பிரதிநிதிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.