06 .செப்.-08 சனிக்கிழமை பிற்பகலில் மேதகு கர்தினால் அந்தோனியோ இன்னசெண்ட்டி காலமானார்.
அவர் அரெஸ்ஸோ மாநிலத்தின் பியசோல் மறைமாவட்டத்தில் பாப்பி என்ற இடத்தில் 23,ஆகஸ்ட் 1915
ல் பிறந்தார் . 17 ஜூலை 1938 ல் குருப்பட்டம் பெற்றார். திருச்சபை சட்டத்தில் கிரகோரியன்
பல்கலைக் கழகத்தில் 1941 ல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் பியசோல் குருமடத்தில் திருச்சபைச்
சட்டமும் நன்னெறி இறையியலும் கற்றுக்கொடுத்தார் . அதே சமயம் ஆயர் ஜான் ஜார்ஜ்ஜின் செயலராகவும்
பணியாற்றினார். திருச்சபையின் கொள்கைகள் பற்றி உரோமையின் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில்
சிறப்புப் பட்டம் பெற்றார் . பெப்ரவரி 18 , 1968 ல் பிலாரன்ஸின் மங்கள வார்த்தை பசிலிக்காவில்
ஆயர் பட்டம் வழங்கப்பட்டார் . பிப்ரவரி 26, 1973 ல் உரோமையில் அருட்சாதனங்கள் வாரியத்தின்
செயலராகவும் பின்னர் 1975ல் வழிபாட்டு வாரியத்தின் செயலராகவும் பணி புரிந்தார் . அக்டோபர்
4 , 1980 லிருந்து 85 வரை ஸ்பெயின் நாட்டின் திருப்பீடத் தூதுவராக இருந்தார். கர்தினாலாகப்
பணியேற்ற அவர் ஜனவரி 1986 லிருந்து ஜூலை முதல் தேதி 1991 வரை திருப்பீட குருக்கள் வாரியத்
தலைவராக இருந்தார் .