குருத்துவ, துறவற பயிற்சியில் கவனம் செலுத்த அழைப்பு - திருத்தந்தை
நிக்கராகுவா நாட்டு ஆயர்களை அட் லிமினா சந்திப்பை முன்னிட்டு சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை,
திருச்சபையின் கோட்பாடுகளுக்குப் பிரமாணிக்கமாகவும், அதேசமயம் துறவற வாழ்வில் ஆழமான பற்று
கொண்டு வாழ்வும் உதவும் வகையில் குருத்துவ, துறவற பயிற்சிகள் அமையுமாறு வலியுறுத்தினார்.
நிக்கராகுவா
ஆயர்கள் துன்புறும் மக்களோடு இருந்து செயல்படுவதற்கும், நாட்டில் இடம் பெறும் அநீதிகள்
களையப்படவும் மனிதனின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படவும் உரையாடல் சூழல்களை உருவாக்கியிருப்பதற்கும்
தனது பாராட்டுதல்களையும் தெரிவித்தார் அவர்.
நல்ல அரசியல் வாழ்வை ஊக்குவிப்பதற்கான
ஆயர்களின் பணிகளைத் தூண்டிய திருத்தந்தை, கத்தோலிக்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும்
கேட்டுக் கொண்டார்.