2008-09-06 13:11:57

உலக ஆயர் மன்றத்திற்கு பார்வையாளர்கள், வல்லுநர்கள் நியமனம்


செப்.06, 2008. வருகிற அக்டோபர் 5 முதல் 26 வரை வத்திக்கானில் நடைபெறும் 12 வது உலக ஆயர் மன்றத்திற்கு பார்வையாளர்கள், வல்லுநர்கள், மற்றும் உறுப்பினர்களை இன்று நியமித்துள்ளார் திருத்தந்தை.

சங்கணாச்சேரி சீரோ மலபார் உயர் மறைமாவட்ட பேச்சாளர் டாக்டர் பொன்புழகோட்டயில் செரியன் அனியன்குஞ்ஞ என்பவரை பார்வையாளராகவும் மும்பை கத்தோலிக்க விவிலிய நிறுவனத் தலைவர் இயேசு சபை அருட்தந்தை பியோரெல்லோ மாஸ்கரென்காஸ் என்பவரை வல்லுநராகவும் நியமித்துள்ளார் திருத்தந்தை.

இவர்களைத் தவிர பல நாடுகளிலிருந்து பார்வையாளர்கள், வல்லுநர்கள் மற்றும் சிறப்பு உறுப்பினர்களையும் நியமித்துள்ளார் திருத்தந்தை.

திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் நடைபெறும்

இவ்வுலக ஆயர் மன்றத்தை வருகிற அக்டோபர் 5ம் தேதி புனித பவுல் பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்தித் தொடங்கி வைப்பார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.