செப்டம்பர் 8ம் தேதி வேளாங்கண்ணி அருள்மிகு ஆரோக்ய அன்னை திருவிழா. அதையொட்டி ஆகஸ்ட்
29ம் தேதி அன்னையின் திருத்தல கொடியேற்றப்பட்டு நவநாள் பக்தி முயற்சிகள் சிறப்பாக நடைபெற்று
வருகின்றன. இத்திருவிழா நடைபெற்று வரும் விதம் பற்றி அறிய வேளாங்கண்ணி திருத்தல அதிபர்
அ.திரு. பி.சேவியர் அவர்களைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டோம். அவர் பேசுவதையும் ஆரோக்ய
அன்னையின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமைகளையும் கேட்போம்.