ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்துக்கு வர கர்தினாலுக்கு அழைப்பு .04 செப்.-08 .
நியூயார்க் நகரில் நடக்க உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வறுமை போக்கும் உச்சநிலை கருத்தரங்குக்கு
வருமாறு கர்தினால் மாராடீகாவுக்கு ஐ . நா .சபைத்தலைவர் பாங்கி மூன் அழைப்பு அனுப்பியுள்ளார்
. ஐ.நா சபையின் இந்த நூற்றாண்டுக்கான வளர்ச்சித்திட்டக் கருத்தரங்கு செப்.- 25 ல் தொடங்கவுள்ளது
. அங்குச் செல்லும் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரிகுவஸ் மாராடீகா நல்ல ஒத்துழைப்புக்கு அழைப்பு
விடுப்பார் ௭னத் தெரிகிறது. திட்டங்கள் உலக ஏழ்மையை வெகுவாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
. 2015 ஆம் ஆண்டுக்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கு திட்டமிட்டபடி செயல்படவில்லை எனக் கவலை
தெரிவித்தார் கர்தினால் . ஒத்துழைப்பு இல்லாததே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. நடக்கவுள்ள
ஐ.நாக் கருத்தரங்கில் இதுவரை வறுமையைப் போக்க எடுத்துள்ள திட்டங்களை உலகத் தலைவர்கள்
சீர்தூக்கிப் பார்க்க உள்ளனர் . வறுமை காரணமாக
ஆண்டுக்கு உலகில் ஒரு கோடிக் குழந்தைகள்
இறப்பதாகத் தெரிகிறது.