2008-09-04 19:27:36

இயற்கைச் செல்வத்தை வீணடிக்க வேண்டாம் . இத்தாலிய ஆயர் குழு .04செப்டம்பர்08 .


இத்தாலிய ஆயர் குழுவின் – சுற்றுச் சூழல் – மாற்றத்துக்கான கருத்தரங்கு உரோமையில் நடந்து வருகிறது .௭ரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் வீணாக்க வேண்டாம் ௭னவும் ஆயர் குழு கேட்டுக்கொண்டுள்ளது . இவ்வாரம் செவ்வாய் வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த ஆயர்கள் குழுவின் உதவியாளர் பால் தார்சி கூறுகையில் , உலகத்தின் செல்வங்களை வீணடிப்பதால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள் ௭ன்றார் . உலகம் ௭ல்லோருக்கும் பொதுவான வீடு . அதை ௭ல்லோரும் பாதுகாக்க வேண்டும் ௭ன்றும் பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் சிந்தனை மாற வேணடும் ௭னவும் கூறிய அவர் விவிலியம் காட்டுவது போல அதிசய உலகத்தைப் பார்த்து மகிழ வேண்டும் ௭னவும் கூறினார் .








All the contents on this site are copyrighted ©.