2008-09-03 15:03:01

முஸ்லீம்களுக்கு வாழ்த்துக்கள் - ஈராக் பேராயர்


செப். 03 முஸ்லீம்கள் ராமதான் மாதத்தை நேற்று தொடங்கியுள்ள வேளை, முஸ்லீம் தலைவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஈராக் பேராயர் ஒருவர்.

ராமதான் மாதத் தொடக்கத்தை முன்னட்டு கிர்குக் இசுலாமியத் தலைவர்களுக்கு உரையாற்றிய அந்நகர் பேராயர் லூயிஸ் சாக்கோ, உலகில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே நன்மைத்தனமும், சகோதரத்துவமும், அமைதியும் ஏற்பட செபித்தார்.

ராமதான், செபம், நோன்பு, பிறரன்பு, தியாகங்கள் மற்றும் நன்மைச் செயல்கள் செய்வதற்கான மாதம் என்பதை அறிந்திருக்கிறோம் என்றுரைத்த பேராயர் சாக்கோ, ஈராக்கில் வன்முறைகளும் காழ்ப்புணர்வுகளும் அகன்று கடவுள் அமைதியைக் கொடுப்பதற்குச் செபிக்குமாறு கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.