2008-09-02 15:04:38

குடியேற்றங்களால் ஏற்பட்டுள்ள பொதுவான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஆசிய திருச்சபைகள் பொதுவான அணுகுமுறைகளைக் கையாள அழைப்பு


செப்.02 குடியேற்றங்களால் ஏற்பட்டுள்ள பொதுவான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஆசிய திருச்சபைகள் பொதுவான அணுகுமுறைகளைக் கையாள்வது குறித்து சிந்திக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் ஆங்கெல் லாக்தமேயொ ௬றினார்.

கடந்த வாரத்தில் மனிலாவில் நடை பெற்ற ஆசிய திருச்சபைகள் கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராயர் லாக்தமேயொ, குடியேற்றதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு சமூகக் கொள்கைகளை உருவாக்குமாறு அரசுகளை ஆசிய திருச்சபைகள் வலியுறுத்த வேண்டும் என்றும் ௬றினார்.

அரசுகள் குடியேறிகளால் கிடைக்கும் பொருளாதார ஆதாயங்களை மட்டும் நோக்குவதால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் குறை ௬றினார்.

சர்வதேச கத்தோலிக்க குடியேற்ற அவை ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கில் இந்தியா, இலங்கை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 18 ஆசிய நாடுகளிலிருந்து 40 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

உலக தொழில் நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஆசியாவில் குறைந்தது 2 கோடியே 20 இலட்சம் குடியேற்ற தொழிலாளர்கள் உள்ளனர். இன்னும், ஆசியாவைச் சேர்ந்த ஏறத்தாழ 5 கோடி குடியேறிகள் வேலையோடும் வேலையின்றியும் இருக்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.