2008-09-01 19:55:08

பீகார் வெள்ளம் . காரித்தாஸ் உதவி .010908.


பீகாரில் 25 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பீகாரின் பல பகுதிகள் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பீகாரில் காரித்தாஸ் நிறுவனம் முழுமூச்சாக சேவையில் இறங்கியுள்ளது. உணவு , மருந்து மற்றும் கூடாரம் ஆகிய அவசியப் பொருட்களை வழங்கி வருகிறது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் அகப்பட்டுக் கொண்டிருப்போரைக் காப்பாற்ற வேண்டிய அவசரப்பணி காத்திருப்பதாக காரித்தாஸ் கூறியுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட பீகாரின் மாதேபுரா பகுதியில் 14 இலட்சம் பேர் வாழ்கிறார்கள். நிலைமையைச் சமாளிக்கமுடியாமல் இந்திய அரசு திணறிக்கொண்டிருப்பதாகச் செய்திகள தெரிவிக்கின்றன . காரித்தாஸ் நிலைமையைக் கணித்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.