கென்யத் தலத்திருச்சபை கருக்கலைப்புக்கு எதிராக போராட்டம்
ஆகஸ்ட் 30 ஆப்ரிக்க நாடான கென்யாவில் கருக்கலைப்பை சட்டரீதியாக அங்கீகரிப்பதற்கான அனைத்து
முயற்சிகளுக்கு எதிராய்க் கத்தோலிக்கத் தலத்திருச்சபை குரல் எழுப்பும் என்று அந்நாட்டு
கர்தினால் ஜான் நுயே ௬றினார்.
வாழ்வுக்கு ஆதரவான முயற்சிகளுக்குத் திருச்சபை
எப்பொழுதும் ஆதரவாய் இருக்கும் என்று கர்தினால் நுயே மேலும் ௬றினார்.
கென்யாவில்
கருக்கலைப்பை சட்டரீதியாக அங்கீகரிப்பதற்கு நிதி உதிவி செய்யும் மேற்கத்திய நாடுகள் மற்றும்
ஐ.நா. நிறுவனங்களைத் தலத்திருச்சபை தொடர்ந்து கண்டித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.