2008-08-30 14:29:19

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து மதுரையில் ஊர்வலம்


ஆகஸ்ட் 30 ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து மதுரையில் இஞ்ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலம் நடைபெறும் என்று மதுரை உயர் மறைமாவட்ட கத்தோலிக்கப் பேராயர் பீட்டர் பெர்னாண்டோ அறிவித்தார்.

இது குறித்து நிருபர்களுக்குப் பேட்டியளித்த பேராயர் பீட்டர், வி.எச்.பி தலைவர் ஸ்வாமி லட்சுமணானந்த சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம், இவரைக் கொலை செய்தவர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர், ஆயினும் இதற்கு கிறிஸ்தவர்கள்தான் காரணம் என்று ௬றி கலவரம் தூண்டிவிடப்பட்டுள்ளது கவலை தருவதாய் உள்ளது என்றார்.

இப்பிரச்சனையில் உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் ௬றினார்.








All the contents on this site are copyrighted ©.