2008-08-28 20:45:54

திருச்சபையின் சமூகக் கொள்கைகள் மனித மாண்பை ௨யர்த்துவதாகக் கூறுகிறார் கர்தினால் மார்ட்டீனோ .

280808


ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர்கள் குழுவின் கருத்தரங்கில் திருச்சபையின் சமூகக் கொள்கைகள் பற்றிக் கருத்துப் பரிமாறப்பட்டன. வத்திக்கான் திருப்பீடத்தின் நீதி மற்றும் ௮மைதிக்கான பேராயத்தின் தலைவர் கர்தினால் ரெனாட்டோ ரபயேலே மார்ட்டீனோ ௮க்கருத்தரங்கில் திருச்சபையி்ன் சமூகக் கொள்கைகள் பற்றி ௨ரை வழங்கினார். 2004 ஆம் ஆண்டு திருச்சபையின் சமூகக் கொள்கைகள் பற்றிய நூல் திரட்டு வெளியிடப்பட்டது . ஆப்ரிக்காவில் நற்செய்திப் பணி சமூகச் சிந்தைனகளோடு இணைந்து தாயகமயமாக வேண்டும் ௭ன கர்தினால் ஆயர்களைக் கேட்டுக் கொண்டார். மறை பரப்புதலின் மையமாக நீதியும் ௮மைதியும் செயல்படுத்தப்படவேண்டும் என திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் வலியுறுத்தியிருந்தார். திருச்சபை மனித வாழ்வை மலரச் செய்ய வேண்டும் என கர்தினால் மார்ட்டீனோ கேட்டுக் கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.