2008-08-27 15:32:03

அருட்திரு தாமஸ் பாண்டிபள்ளி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ புலண் விசாரணை நடத்தப்பட அழைப்பு


 ஆகஸ்ட் 27 இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அருட்திரு தாமஸ் பாண்டிபள்ளி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ புலண் விசாரணை நடத்தப்படுமாறு அம்மாநில கிறிஸ்தவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

ஹைதராபாத் போராயர் மாரம்புடி ஜோசி தலைமையில் ஹைதராபாத் குளக்கரையில் குருக்கள் கன்னியர் பொதுநிலையினர் என 2000த்துக்கு மேலான விசுவாசிகள் கைகளில் மெழுகு திரிகளுடன் ௬டி நின்று இவ்விவகாரத்தில் நீதி வேண்டுமெனக் கோரிக்கை எழுப்பினர்.

அருட்திரு தாமஸ் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் தனக்கு கொடுத்த உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக இதுவரை எந்த சமூக விரோதிகளும் கைது செய்யப்படவில்லை என்று இக்௬ட்டத்தில் ௬றினார் போராயர் ஜோசி.

வகுப்புவாத வன்முறையைக் கண்டித்து எல்லாருக்கும் சமய சுதந்திரம் வழங்க்ப்பட உறுதி அளிக்கப்படுமாறு பொது மக்கள் குரல் எழுப்புமாறு கேட்டுக் கொண்டார் ஆந்திர ஆயர் பேரவையின் உதவிச் செயலர் அருட்திரு அந்தோணிராஜ் தும்மா.

ஆகஸ்ட் 16ம் தேதி இரவு கொடூரமாய்க் கொல்லப்பட்டார் அருட்திரு தாமஸ் பாண்டிபள்ளி.








All the contents on this site are copyrighted ©.