2008-08-26 15:57:14

சீனாவில் கத்தோலிக்க ஆயர் கைது


ஆகஸ்ட் 26 சீனாவில் திருத்தந்தைக்குப் பிரமாணிக்கமாக இருக்கும் கத்தோலிக்க ஆயர்

ஒருவர் சீன பாதுகாப்பு மற்றும் அரசு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நிறைவுற்ற நாளில் 73 வயதாகும் ஆயர் ஜுலியஸ் ஜியா ஜிகுவோ என்பவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கிறிஸ்து அரசர் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்திய பின்னர் அப் பேராலய வளாகத்தில் சில கத்தோலிக்கருடன் ஆயர் பேசிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்ல சுகமில்லாத ஆயர் ஜுலியஸ் இத்திங்கள் முதல் வீட்டுக் காவலில் வைக்க ப்பட்டுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் ௬றுகின்றன







All the contents on this site are copyrighted ©.