ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம் பெறும் வன்முறையில் வறியவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்
ஆகஸ்ட் 23 இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாகக் கடுமையாய்
இடம் பெறும் வன்முறையில் வறியவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதாக தலத் திருச்சபை அதிகாரிகள்
௬றுகின்றனர். இந்தியாவில் முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே மாநிலமான ஜம்மு
காஷ்மீரில் வன்முறை வெடித்ததும் அரசு ஊரடங்குச் சட்டத்தையும் இன்னும் பிற தடை விதிகளையும்
கொண்டு வந்தது, எனினும் நிலைமை மிகவும் பதட்டமாகவே இருக்கின்றது என்று ஜம்மு காஷ்மீர்
மாநில தலத்திருச்சபையின் பல்சமய அமைதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இயேசு சபை அருட்தந்தை
ஜோசப் கலாத்தில் ௬றினார். வன்முறையைக் குறைப்பதற்கு அரசு முயற்சித்து வருகின்ற போதிலும்
அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் ஏழைகள் மிகவும் கஷ்டப்படுகினறனர் என்றும் அக்குரு
௬றினார்.அமர்நாத் ஆலயத்திற்கு நிலம் ஒதுக்குவது தொடர்பான மாநில அரசின் தீர்மானத்தையொட்டி
கடந்த மே மாதத்தில் வன்முறை வெடித்தது