2018-07-12 14:43:00

தஞ்சாவூர் திருஇருதய ஆண்டவர் பேராலயத்தின் 150ம் ஆண்டு நிறைவு


ஜூலை,12,2018. தஞ்சாவூர் திருஇதய ஆண்டவர் பேராலயத்தின் 150ம் ஆண்டு நிறைவு பெருவிழா, ஜூன் 28ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு, ஜூலை 08, இஞ்ஞாயிறன்று நிறைவு பெற்றது. இந்த 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தபால்தலையும் வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பூக்காரத்தெருவில் அமைந்துள்ள திரு இருதய ஆண்டவர் பேராலயம், தஞ்சை மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமாக விளங்குகிறது. 1867-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பேராலயத்தின் வரலாறு மற்றும், இந்தப் பெருவிழா சிறப்பிக்கப்பட்ட விதம் பற்றி வாட்சப் வழியாக வத்திக்கான் வானொலி நேயர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார், அப்பேராலய பங்குத்தந்தை அருள்பணி முனைவர் செபஸ்தியான் பெரியண்ணா அவர்கள் .   

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.