2018-05-18 14:08:00

இமயமாகும் இளமை …............: மகனுடன் தேர்வு எழுதிய தாய்


பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த ரஜினிபாலா, 1989ம் ஆண்டு தனது ஒன்பதாம் வகுப்பை முடித்தார். குடும்ப சூழ்நிலையால் ரஜினிபாலாவால் தனது படிப்பைத் தொடர முடியாமல் போனது. தற்போது 44 வயதான தாய் ரஜினிபாலாவுக்கு, 10ம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் உள்ளான். ரஜினிபாலா, தனது கணவரின் தொடர் அறிவுறுத்தலால் 10ம் வகுப்பு தேர்வெழுத, மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். மகனுடன் ஒன்றாகப் பள்ளிக்குச் சென்றதுடன் சிறப்பு வகுப்புகளுக்கும் ஒன்றாகவே சென்று படித்தார் அவர். மகனுடன் ஒன்றாகப் படித்த அவர், மகனுடனேயே சேர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வையும் எழுதியுள்ளார். கல்விக்கு வயது ஒன்றும் தடையல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக, ரஜினிபாலா ஏறக்குறைய 29 வருடங்களுக்குப் பிறகு 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். ரஜினிபாலாவை, தொடர்ந்து கல்வி கற்க அறிவுறுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ள அவரின் கணவரும் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.