2018-04-17 16:02:00

குறைவாக எதிர்பார்க்கும் இறைவன், அதிகமாக வாரி வழங்குகிறார்


ஏப்.17,2018. நமக்கு அதிகமாக வழங்கும் இறைவன், நம்மிடமிருந்து மிகக்குறைவாகவே எதிர்பார்க்கிறார், என்ற கருத்துடன், இச்செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'நம்மிடம் சிறிதளவே கேட்கும் இறைவன், நமக்கு மிக அதிகமாக வாரி வழங்குகிறார். நாம் நம் இதயங்களைத் திறந்து, அவரையும், ஏழை, எளிய சகோதரர் சகோதரிகளையும் வரவேற்க வேண்டும் என நம்மிடம் கேட்கிறார்' என திருத்தந்தையின் டுவிட்டரில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 16ம் தேதி, இத்திங்களன்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் 91வது பிறந்த நாளை சிறப்பித்ததையொட்டி, இத்திங்கள் காலை திருப்பலியை, முன்னாள் திருத்தந்தைக்கு ஒப்புக்கொடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தைக்கு தன் தனிப்பட்ட வாழ்த்துக்களையும் அனுப்பி வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.