மார்ச்,19,2018. மார்ச் 19, இத்திங்களன்று, திரு அவையில் சிறப்பிக்கப்பட்ட, புனித யோசேப்பின் திருவிழாவையொட்டி, உலகின் தந்தையர் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'அன்பு தந்தையரே! புனித யோசேப்பின் திருவிழா வாழ்த்துக்கள். உங்கள் குழந்தைகள் ஞானத்திலும், அருளிலும் வளரும்போது, புனித யோசேப்பைப் பின்பற்றி, உங்கள் அக்கறையை காட்டுங்கள்' என்று, இத்திங்களன்று, திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.
மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'இளையோரின் ஏக்கங்களுக்கு செவிமடுக்கும்போது, நமக்கு முன்னால் விரிந்திருக்கும் உலகை குறித்த பார்வையையும், திருஅவை நடந்துசெல்ல அழைக்கப்பட்டிருக்கும் பாதை குறித்தும் அறிவோம்' என எழுதியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |