2018-03-08 15:31:00

இந்திய ஆயர் பேரவை தலைமையகத்தில் அனைத்துலக பெண்கள் நாள்


மார்ச்,08,2018. மார்ச் 8, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக பெண்கள் நாளையொட்டி, புது டில்லியில் உள்ள இந்திய ஆயர் பேரவை தலைமையகத்தில், பேரவையின் செயலர் ஆயர் தியடோர் மஸ்கரீனஸ் அவர்கள் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார் என்று, பேரவை செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

"முன்னேற்றத்திற்காக வலியுறுத்துங்கள்" (“Press for Progress”) என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்படும் இந்த உலகநாள், முதன்முறையாக இந்திய ஆயர் பேரவை தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது என்று இச்செய்திக்குறிப்பு கூறியுள்ளது.

மேலும், பாகிஸ்தானில், லாகூர் நகரில் இயங்கிவரும் தொமினிக்கன் அமைதி மையத்தில், கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்கள் இணைந்து, பெண்கள் நாளைச் சிறப்பித்தனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

பாகிஸ்தான் தேர்தல்களில் பெண்கள் வேட்பாளர்களாக இருப்பது, சொத்துக்களுக்கு சம உரிமை பெறுவது, கல்வி பெறுவது, போன்ற சமுதாய உரிமைகளை முன்வைத்து, இந்த பெண்கள் நாள் கூட்டம் நடைபெற்றது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.