2018-02-15 14:50:00

நேர்காணல் – ஐ.நா.வில் கிளேரிசியன் சபை- பாகம் 1 – அ.பணி ரோகன்


பிப்.15,2018. அ.பணி ரோகன் டாமினிக் அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் கிளேரிசியன் சபையின் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகின்றார். இலங்கையைச் சேர்ந்த இவர், கிளேரிசியன் சபையில் பல முக்கியமான பொறுப்புக்களையும் வகித்திருப்பவர். இலங்கையில், வத்திக்கான் வானொலி தமிழ் அன்புள்ளங்களுக்குத் தொடர்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பல ஆண்டுகளுக்குமுன், இலங்கையில் நேயர் சந்திப்பு நடத்தவும் உதவி செய்திருக்கின்றார் அ.பணி ரோகன் டாமினிக் அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனம் பற்றியும், அதில் அரசு-சாரா அமைப்புகளின் நிலைப்பாடு பற்றியும் இன்று பகிர்ந்துகொள்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.