2018-02-08 10:51:00

இலங்கையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு – பாஸ்டர் பாலகிருஷ்ணன்


பிப்.08,2018. ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை பாஸ்டர் டி.கே.பாலகிருஷ்ணன் அவர்கள், இலங்கையின் கொழும்பு நகரில் புனித பவுல் மிலாகிரியா ஆங்லிக்கன் சபை ஆலய போதகர். சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள, WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் Bossey கிறிஸ்தவ ஒன்றிப்பு கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் இவரை, வத்திக்கான் வானொலியில் சந்தித்து, இக்கல்லூரி பற்றியும், இலங்கையில் கிறிஸ்தவ சபைகள் மத்தியில் நிலவும் ஒன்றிப்பு பற்றியும் கேட்டோம். 1946ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Bossey கிறிஸ்தவ ஒன்றிப்பு கல்லூரி, ஜெனீவா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது. இக்கல்லூரி, ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் போதகர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.