2018-01-29 16:53:00

அகமதாபாத் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்


சன.29,2018. குஜராத்தின் அகமதாபாத் மறைமாவட்ட ஆயராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த அருள்பணி அத்தனாசியுஸ் இரத்தினசாமி சுவாமியடியான் அவர்களை இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பரம்புக்கரை என்ற ஊரில் 1961ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்த அருள்பணி இரத்தினசாமி அவர்கள், அகமதாபாத் மறைமாவட்ட அருள்பணியாளராக 1989ம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்டார். அகமதாபாத் இளம் குருமட, மற்றும், உயர் குருமட அதிபராக பணியாற்றியுள்ள இவர், 1994ம் ஆண்டு முதல் 98ம் ஆண்டு வரை உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றுள்ளார்.

இம்மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் தாமஸ் இக்னேசியஸ் மக்வான் அவர்கள், 2015ம் ஆண்டு காந்தி நகர் பேராயராக உயர்த்தப்பட்டதிலிருந்து, ஆயரின்றி இம்மறைமாவட்டம் இருந்ததைத் தொடர்ந்து, தமிழரான அருள்பணி அத்தனாசியுஸ் இரத்தினசாமியை புதிய ஆயராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.