2017-12-18 16:20:00

நாம் இயேசுவை சந்திக்க ஏழைகள் உதவுகின்றனர்


டிச.18,2017. 'உதவிக்கென நம் கதவுகளை ஒருவர் தட்டும்போது, இயேசுவை சந்திப்பதற்கு நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பாக அதனை நோக்கவேண்டும்' என்பதை மையக்கருத்தாகக் கொண்டு, டுவிட்டர் செய்தியை, திங்களன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'நம்முடைய வார்த்தைகளால் அல்ல, மாறாக நடவடிக்கைகளால், நல்லவற்றைத் தேடி, அவை மீது அன்புகொள்ளும் ஞானத்தை இறைவன் நமக்கு அருள்வாராக' என கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஜப்பான் நாட்டின், டோக்கியோ நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் சோஃபியா பல்கலைக்கழகத்தின் மாணவர்களோடு, காணொளி வடிவம் வழியே தொடர்புகொண்டு, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.