2017-12-12 16:23:00

திருத்தந்தையின் டிசம்பர்,சனவரி திருவழிபாடுகள்


டிச.12,2017. டிசம்பர் 24, ஞாயிறு இரவு 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் பெருவிழா திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 25, திங்கள் பகல் 12 மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவின் மையப்பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் பெருவிழா செய்தியையும், உரோம் நகருக்கும், உலகுக்குமான ஊர்பி எத் ஓர்பி செய்தி மற்றும் ஆசீரையும் வழங்குவார்.

டிசம்பர் 31, ஞாயிறு மாலை 5 மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவில், திருத்தந்தையின் தலைமையில், இறைவனின் அன்னை பெருவிழாவின் திருவிழிப்பு திருப்புகழ்மாலை, திருநற்கருணை ஆசீர் மற்றும், தே தேயும் நன்றிப் பாடல் நடைபெறும்.

சனவரி 01, திங்களன்று, காலை பத்து மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவில், இறைவனின் அன்னை பெருவிழா திருப்பலியையும், சனவரி 06, சனிக்கிழமை, காலை பத்து மணிக்கு, ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா திருப்பலியையும் திருத்தந்தை தலைமையேற்று நிறைவேற்றுவார்.

இவ்வாறு திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள், இச்செவ்வாயன்று அறிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.