2017-11-27 15:55:00

கிறிஸ்து அரசர் திருநாளுக்கு திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


நவ.27,2017. ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்து அரசரை, உண்மையான அரசர் என்று, ஏற்றுக்கொண்டு, கல்வாரியில், சிலுவையில் தொங்கிய கள்வர்களில் ஒருவர் கூறிய சொற்களை மையப்படுத்தி, திருத்தந்தையின் ஞாயிறு டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.

"நாம் இன்று இயேசுவை கண்ணோக்கி, நமது உள்ளத்திலிருந்து அவரிடம் இவ்வாறு சொல்வோம்: 'ஆண்டவரே, இப்போது நீர் உமது அரசில் இருக்கிறீர், எனவே, என்னை நினைவு கூர்ந்தருளும்'" என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வரும் டுவிட்டர் செய்திகள், நவம்பர் 26, இஞ்ஞாயிறு முடிய, 1,378 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது என்பதும், அவரது செய்திகளை ஆங்கில மொழியில் தொடர்ந்து பின்பற்றி வருவோரின் எண்ணிக்கை, 1 கோடியே, 51 இலட்சத்து 44,282 என்பதும் குறிப்பிடத்தக்கன.

@pontifex  என்ற முகவரியில் திருத்தந்தை வெளியிடும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானியம், போர்த்துகீசியம், இஸ்பானியம், இலத்தீன், போலந்து, மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.