நவ.,20,2017. இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குழந்தைகள் முகங்களில் எப்போதும் புன்னகை தவழ்ந்திடுவதை உறுதிசெய்ய வேண்டிய நம் கடமையை வலியுறுத்தியுள்ளார்.
'குழந்தைகள் தொடர்ந்து புன்னகைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்கு ஒன்றிணைந்து உழைப்போம். அவர்கள் மகிழ்ச்சியாலும், நம்பிக்கையாலும் நிரப்பப்பட்டவர்களாக, முகமலர்ச்சியுடன் விளங்கட்டும்' என, இத்திங்களன்று வெளியான டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'நம் ஒருமைப்பாட்டைக் கேட்டு கைகளை நீட்டும் மக்களை நோக்கி, முழு திருஅவையும் தன் பார்வையை பதிக்கவேண்டும் என இந்நாளில் அழைப்புவிடுக்கிறேன்' என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
மேலும், இத்திங்களன்று, 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த ஹங்கேரி நாட்டு ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |