2017-11-11 16:13:00

திருத்தந்தையைச் சந்தித்த சியேரா லியோனே அரசுத்தலைவர்


நவ.11,2017. சியேரா லியோனே (Sierra Leone) நாட்டின் அரசுத்தலைவர், Ernest Bai Koroma அவர்கள், இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையுடன் இடம்பெற்ற இச்சந்திப்பிற்குப் பிறகு, திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர், Paul Richard Gallagher அவர்களையும் சந்தித்து உரையாடினார், அரசுத்தலைவர், Koroma.

இச்சந்திப்புக்களின்போது, சியேரா லியோனே நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், நாட்டைக் கட்டியெழுப்புவதில் திருஅவையின் பங்களிப்பு, கல்வி, மற்றும் நலவாழ்வுத் துறைகளில் திருஅவை ஆற்றிவரும் பணிகள் ஆகியவை குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.

மனித உரிமை, சிறுபான்மையினரின் உரிமைகள், நாட்டின் கலாச்சாரம், மதங்கள், பல்வேறு பாரம்பரியங்களின் வளம், ஒன்றிணைந்து வாழ்வதற்கு உதவுதல் போன்றவை குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.