2017-11-03 14:44:00

பாசமுள்ள பார்வையில்...: பெற்றவர் காட்டும் பாசத்திற்கு இணை


அடுத்த மாதம் பள்ளியில் நடக்கவிருந்த பேச்சுப்போட்டிக்கு அவனும் பெயர் கொடுத்திருந்தான். ஒவ்வோர் ஆண்டும் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு, முதல் பரிசை தட்டிச்செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அவனுக்கு, இந்த ஆண்டு தலைப்புதான், மலைப்பாக இருந்தது. 'தாய்ப் பாசம்' என்பதுதான் தலைப்பாம். எந்தத் தலைப்பாக இருந்தாலும், புத்தகத்தைப் படித்தோ, கணனியை உருட்டியோ கருத்துக்களை சேகரித்து விடுவான். ஆனால், என்னதான் இருந்தாலும் இதில் கொஞ்சமாவது அனுபவத்தையும் கலந்து பேசினால் நன்றாக இருக்கும் என எண்ணினான். பிறந்த உடனேயே தாயை இழந்து, தந்தையாலும் கைவிடப்பட்ட அவன், வாழ்ந்ததெல்லாம் அன்னை தெரேசாவின் சிறார் காப்பகத்தில். அந்த சபை சகோதரிகளிடம் வளர்ந்த தான், எவ்வளவோ பாசத்துடன் வளர்க்கப்பட்டிருந்தாலும், தாய்ப் பாசம் எப்படி இருக்கும் என எப்படி உரை வழங்க முடியும் என சிந்தித்த அவன், போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான். அன்று மாலையில், தனக்கு பொறுப்பாக அந்த இல்லத்தில் இருக்கும் சகோதரியிடம் சென்று, தாயன்பு குறித்து தான் என்ன பேசமுடியும் என ஆலோசனைக் கேட்டான் அவன். அந்த சகோதரி கூறினார், 'எந்த தலைப்புக் கொடுத்தாலும் அஞ்சாமல் பேசிய என் மகனா இப்படி குழம்புவது? என்று. முதன் முறையாக அந்த சகோதரியை, அம்மா என அழைத்த அவன் சொன்னான், ''இல்லையம்மா, தாய்ப் பாசம் என்றால், பெற்றவரின் பாசம் மட்டும்தான் என்று நான்தான் தவறாக நினைத்துவிட்டேன். தாய்ப் பாசத்தின் ஆழத்தை நான் பேசிக்காட்டி ஜெயித்து வருகிறேன்'' என்று.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.