2017-11-03 09:45:00

இறந்தோரின் நினைவு நாளுக்கு, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


நவ.02,2017. நவம்பர் 2, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட இறந்தோரின் நினைவு நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை வழங்கினார்.

"மரணம் என்ற மறையுண்மைக்கு முன், நாம் அனைவரும் சிறியோராய், பாதுகாப்பற்றவர்களாய் இருக்கிறோம். இருப்பினும், இறக்கும் தருணத்தில் நம் உள்ளங்களில் நம்பிக்கை என்ற சுடரை அணையாமல் காப்பது எத்துணை சிறந்த வரம்!" என்ற சொற்களை திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், உரோம் நகருக்கு தெற்கே 66 கிலோமீட்டர் தூரத்தில், நெத்தூனோ எனுமிடத்தில் அமைந்துள்ள அமெரிக்க வீரர்களின் கல்லறையில், இவ்வியாழன் பிற்பகல் 3.15 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றி, அனைத்து ஆன்மாக்களுக்காகவும் வேண்டிக்கொண்டார்.

போர்களில் உயிர் துறந்துள்ள அனைத்து ஆன்மாக்களுக்காகவும் நிறைவேற்றிய இத்திருப்பலிக்குப் பின், வத்திக்கான் திரும்பும் வழியில், ஃபோஸ்ஸே அர்தியத்தீனே என்ற இடத்தில் உள்ள கல்லறைக்கு சென்று செபித்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.