2017-11-01 15:34:00

திருத்தந்தை - ஆசிய கிறிஸ்தவர்களுக்காக வேண்டிக்கொள்வோம்


நவ.01,2017. நவம்பர் 1, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவையொட்டி, அனைவரையும் புனிதம் நோக்கி அழைக்கும்வண்ணம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.

"அன்பு நண்பர்களே, இந்த உலகிற்கு புனிதர்கள் தேவை. நாம் அனைவரும் எவ்வித விதிவிலக்குமின்றி புனிதத்திற்கு அழைக்கப்பட்டுள்ளோம். அஞ்சாதீர்கள்!" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக நவம்பர் 1, இப்புதனன்று வெளியாயின.

மேலும், ஆசிய கிறிஸ்தவர்களையும், பலசமய உரையாடல் மற்றும் அமைதியையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் மாதத்திற்குரிய தன் செப கருத்தை வெளியிட்டுள்ளார்.

"ஆசிய கிறிஸ்தவர்களுக்காக வேண்டிக்கொள்வோம். நற்செய்தியை தங்கள் சொல்லாலும், செயலாலும் பறைசாற்றி, பிற சமயத்தவரோடு, உரையாடலையும், அமைதியையும் வளர்ப்பதற்கு செபிப்போமாக" என்ற சொற்களை தன் நவம்பர் மாத செபக்கருத்தாக திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.