2017-10-30 16:33:00

ஆச்சர்ய நிகழ்வுகளிலிருந்து, வாழும் கலையை கற்க.....


அக்.30,2017. உலகின் விந்தை நிகழ்வுகளிலிருந்து, வாழும் கலையைக் கற்றுக்கொண்டு, நம்பிக்கையிழக்காமல் செயல்படுங்கள் என்ற கருத்தை மையமாக வைத்து இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

‘ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். வாழ்வில் விந்தைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழுங்கள், அன்புகூருங்கள், விசுவசியுங்கள். கடவுளின் துணைகொண்டு, ஒருபோதும் நம்பிக்கையிழக்காமல் செயல்படுங்கள்’ என்பதாக திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி இருந்தது.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘முழு உள்ளத்தோடு எவ்வாறு அன்புகூர்வது என்பதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளும்பொருட்டு, உங்கள் கண்களை  இயேசுவில் நிலைநிறுத்தி வைக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்’ என கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.