2017-10-24 15:41:00

நவம்பர்,டிசம்பர்,2017,சனவரி 2018 திருத்தந்தையின் நிகழ்வுகள்


அக்.24,2017. 2017ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், 2018ம் ஆண்டு சனவரியிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருவழிபாடுகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய விவரங்களை, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான பேரருள்திரு குய்தோ மரினி (Guido Marini). இந்நிகழ்வுகள் பின்வருமாறு....

வருகிற நவம்பர் 2ம் தேதி மாலை 3.15 மணிக்கு நெத்தூனோவிலுள்ள அமெரிக்க இராணுவ வீரர்கள் கல்லறையில் திருப்பலி;  3ம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், இறந்த கர்தினால்கள், ஆயர்களுக்குத் திருப்பலி; 19ம் தேதி காலை 10 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், உலக ஏழைகள் தின திருப்பலி; 26ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை, மியான்மார், பங்களாதேஷ் நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம்;

டிசம்பர் 8ம் தேதி மாலை 4 மணிக்கு, உரோம் இஸ்பானிய வளாகத்தில் அமல அன்னைக்கு மலர் வளையம் வைத்து செபித்தல்; 12ம் தேதி மாலை 6 மணிக்கு, குவாதாலூப்பே அன்னை மரியா விழாவன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், இலத்தீன் அமெரிக்காவுக்காகத் திருப்பலி; 24ம் தேதி இரவு 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி; 25ம் தேதி பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவின் மையப்பகுதியில், “ஊர்பி எத் ஓர்பி” செய்தி, ஆசீர்; 31ம் தேதி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், மாலை நன்றி வழிபாடு;

2018ம் ஆண்டு சனவரி முதல் தேதி காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், இறைவனின் தாயாம் அன்னை மரியா விழா மற்றும் 51வது உலக அமைதி தின திருப்பலி; 6ம் தேதி காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், திருக்காட்சி விழா திருப்பலி; 7ம் தேதி ஆண்டவரின் திருமுழுக்கு விழாவன்று காலை 9.30 மணிக்கு சிஸ்டீன் சிற்றாலயத்தில் குழந்தைகளுக்கு திருமுழுக்கு; 2018ம் ஆண்டு சனவரி 15 முதல் 22 வரை, சிலே, பெரு நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் ஆகிய திருத்தந்தையின் நிகழ்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.             

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.